Friday, October 29, 2010

பேயா யுழலும் சிறுமனமே

பேணா யென்சொல் இன்றுமுதல்

நீயாயொன்றும் நாடாதே

நினது தலைவன் யானே காண்

தாயாம் சக்தி தாளினிலும்

தரும மெனயான் குறிப்பதிலும்

ஓயா தேநின் றுழைத்திடுவாய்

உரைத்தேன் அட‌ங்கி உய்யுதியால்.